Monday, March 10, 2008

எய்ட்சை தடுக்க மகளிர் காண்டம்: விரைவில் விற்பனை

எய்ட்சை தடுக்க மகளிர் காண்டம்: விரைவில் விர்பானை

சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 6 மார்ச் 2008 ( 16:49 IST )
எய்ட்ஸ் நோயை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான காண்டம் விரைவில் விற்பனைக்கு வருகிறது.மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், எய்ட்சை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்தில் ஆணுறைகள் விற்பனையில் உள்ள போதிலும், பெண்களுக்கான காண்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் பாலியல் தொடர்பான நோய்களை கட்டுக்குப்படுத்த முடிந்தது. இதை பின்பற்றி, இந்தியாவின் மேற்கூறிய மாநிலங்களில் மகளிர் காண்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக இங்கிலாந்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சுமார் 15 லட்சம் மகளிர் காண்டங்களை இறக்குமதி செய்யவுள்ளது. இந்த காண்டம் ஒன்றின் விலை 5 ரூபாய். இன்னும் 8 மாதங்களில் இந்த காண்டங்கள் தமிழகம் உள்பட மேற்கூறிய மாநிலங்களில் முதல் கட்டமாக விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மத்திய சுகாதாரத்துறை விரைவில் துவக்கவுள்ளது.
(மூலம் - வெப்துனியா)

No comments: