Wednesday, April 30, 2008

Insurance victory for Indian prostitutes:
KOLKATA (Reuters Life!) - Bharati Dey, a former prostitute, has been granted a life insurance cover which she says is a step forward in her campaign to legalise the profession in India.
For more details, click
http://in.news.yahoo.com/reuters_ids_new/20080430/r_t_rtrs_nl_general/tnl-insurance-victory-for-indian-prostit-223dd93.html
தினமும் ஒரு கற்பழிப்பு : தலைகுனியும் தலைநகரம்
நாளொன்றுக்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் நிகழ்வது, தலைநகர் புதுடெல்லியை தலைகுனியச் செய்ய வைத்துள்ளது.இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 330 கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.
For more details click-
http://in.tamil.yahoo.com/News/National/0804/29/1080429031_1.htm

Tuesday, April 29, 2008

Your e-mail address 'can reveal your personality'
Think twice before you pick an email address -- it can reveal your personality.
Researchers at the University of Leipzig in Germany have carried out a study and found that an email address may speak volumes about the character of the person who created the unique online identification.
According to lead researcher Mitja Back, even the thinnest slice of communication via the world wide web - the mere e-mail address -- contains valid information about the personality of its owner.

In their study, the researchers asked a panel of 100 students to guess the personalities of 600 young adults simply by looking at their e-mail addresses.
The panel's guesses agreed mostly with a personality survey the teenagers had completed when it came to qualities like openness, conscientiousness and narcissism, and diverged most on the trait of extroversion.
Addresses that gave away personality often contained full stops, numbers or a name that was obviously not genuine, the researchers found.
Level of accuracy was explained using lens model analyses -- the students made broad use of perceivable e-mail address features in their personality judgements, features were slightly valid and the observers were sensitive to subtle differences in validity between cues.

The study has been published in the latest edition of the Journal of Research in Personality.

Monday, April 28, 2008

இந்தியத் தொலைக்காட்சிகளை பிடித்து ஆட்டும் மூன்று!

“பொழுதுபோக்கிற்கென தனியான சானல்கள் தேவையில்லை. செய்திகளையே பொழுதுபோக்குகளாக மாற்றுவது, பொழுதுபோக்கு விஷயங்களையே மேலும் சுவாரஸ்யமான செய்திகளாக மாற்றுவது. இதுவே தற்பொதைய இந்திய செய்தி தொலைக்காட்சிகளின் புதிய தந்திரம்” என்கிறார் தயா கிஷன் துஸ்ஸு.
மேலும் தகவல் அறிய :
http://tamil.webdunia.com/miscellaneous/literature/magazine/0803/11/1080311034_1.htm
ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதிக்கு அனுமதி!
ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கான யூனிட்டுகளை வெளியிட்டு நிதி திரட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் தகவல் அறிய :
http://tamil.webdunia.com/newsworld/finance/news/0804/28/1080428008_1.htm

Friday, April 18, 2008

அந்த நடிகரை புக் பண்ணாதீங்க எப்பவுமே லேட்டா வருவார்னு தலையாலஅடிச்சுக்கிட்டேன்கேட்டீங்களா? ஏன் என்ன சார் ஆச்சு? படமே ரிலீஸ் ஆயிடுச்சு இப்ப கூட வரல்ல!

மாத‌வி : என்னடி எப்ப பார்த்தாலும் உன் பின்னாடி கழுத ஒண்ணு வந்துகிட்டே இருக்கு?
தே‌வி : என் எ‌தி‌ர்‌த்த வீட்டு பைய‌ன் குடுத்த லவ் லெட்டர் எல்லாத்தையும் இது கிட்ட தா‌ன் தின்ன கொடுத்தேன். அதா‌ன்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே சுத்துது!

Friday, April 11, 2008

மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!

மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!
மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை (சாட்) அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.
சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.
சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.யாரிடமும் முதலில் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் அவரை நேரில் பார்க்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே மிக நிதானமாக உங்களது அறிவைப் பயன்படுத்தி அவரிடம் மெல்ல மெல்ல பழக வேண்டும்ஏனோதானோவென்று ஏதாவது ஒரு இணையதளத்தில் அல்லாமல் பாதுகாப்பான இணையதளத்தில் அரட்டை அடிப்பது நல்லது.
மின்னஞ்சலில் சாட் செய்யும் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள்.
நீங்கள் அரட்டை அடிப்பவர் தன்னைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு குறைந்தபட்ச மதிப்பையே அளியுங்கள்.
நீங்கள் அரட்டை அடிக்கும் நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிந்துகொள்ளாமல் உங்கள் முழுப் பெயரையோ, முகவரி, தொலைபேசி எண், பணியிடம் போன்ற எதையும் அளிக்க வேண்டாம்.
பொதுவாக மின்னஞ்சலுக்கும் சரி, அரட்டைக்கும் சரி நீங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் ஏதாவது செல்லப் பெயரை வைத்துக் கொள்வது அதிக பயனளிக்கும்.
அப்பப்பா......... இவ்வளவு பிரச்சினைகளா? என்று பெருமூச்சு விடாதீர்கள். நீங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் மின்னஞ்சலில் அரட்டை அடித்து நல்ல நல்ல நண்பர்களையும் பெறலாம். அவர்களை ஆயுள் வரை நண்பர்களாகவும் தொடரலாம்.

Thursday, April 10, 2008

புண் + தைலம் = முதல் காதல்!

புண் + தைலம் = முதல் காதல்!
காதல்,
ஜெயித்தவனுக்கு பூமாலை...
தோத்தவனுக்கு காமாலை...!
(ஒரு பொன்மாலைப் பொழுதில், வீட்டுல குப்புற படுத்துகிட்டு நான் யோசிச்ச கவிதை)
முதல் காதல் (அல்லது முதல் ஈர்ப்பு, அல்லது முதல் சைட்) என்பது ஒரு ஃபீலிங்...அதுல ஃபாலிங் ஆனா, கடைசியில ஃபூலிங் (கவித.. கவித...). அஞ்சப்பர் செட்டிநாடு ஓட்டல்ல புகுந்து 500 ரூபாய்க்கு முழுங்கி, வயித்துல வனவிலங்கு சரணாலயத்த உருவாக்கிட்டு கை கழுவி பில்லுக்காக காத்திருக்கும் போது...பிரிண்டிங் மிஸ்டேக் காரணமா 50 ரூபாய்க்கு பில் வந்தா மனசு எப்படி கும்மியடிக்கும்?!... அப்படியொரு குதூகலத்தைத் தான் முதல் காதல் ஏற்படுத்தும்.ஓக்கே, லெட்ஸ் கமிங் டு த பாய்ன்ட்...நான் அப்போ பத்தாவது படிச்சிட்டிருந்தேன் (சென்னையில). எங்க ஒண்ணு விட்ட பக்கத்து வீட்டுல (ஒரு வீடு தள்ளி) 9வது கிளாஸ் படிக்கிற அழகான பொண்ணு இருந்தா. அவ பேரு குஷ்பு (அந்தப் பொண்ணோட எதிர்காலம் கருதி பேர மாத்திருக்கேன்). ரெண்டு பேர் வீட்டுக்கும் நடுவுல இருக்குற வீட்டுல தான் நாங்க (நான், குஷ்பு, உப்பிலி, அவன் தம்பி லோகேஷ்) ஒண்ணா கூடி விளையாடுவோம். அவ வழக்கமா என் கூட தான் அதிக நேரம் கேரம் போர்டு விளையாடுவா. ஒவ்வொரு முறை அந்த வீட்டுக்கு அவ வரும்போதெல்லாம் அரவிந்த் சாமி... அரவிந்த் சாமின்னு என்னை அழகா கூப்பிடுவா (என்னோட எதிர்காலம் கருதி, பேர மாத்திருக்கேன்). நானும், இன்ஸ்பெக்டர் கூப்பிட்டவுடனேயே ஓடுற ஏட்டய்யா மாதிரி பரபரன்னு ஓடி அவ முன்னாடி போய் நிப்பேன். இப்படியே கூத்தும் கும்மாளமுமா எங்களோட நாட்கள் ஓடுச்சி...ஒரு நாள் வழக்கம் போல அவ என்னை கூப்பிட்டவுடனேயே நான் துள்ளி குதிச்சி ஓடும்போது, தெரியாம எங்க அப்பச்சி கால தட்டி விட்டுட்டேன். உடனே அவங்க "அட ந்ந்தந்தானே...பொண்டாட்டி கூப்புட்டாப்புல இப்பிடி ஓடுறானே...இந்தப் புள்ளய கட்டுனா என்னைய கொலையா கொண்டுபுடுவான் போலருக்கே யாத்தீ" அப்படீன்னு கத்த... எனக்குள்ள ஒரு Na + O2 → Na2O (ரசாயன) மாற்றம். அந்த நிமிஷம் முதல், டி.வி., பெட்டிக்குள்ள பாட்டு ஓடும்போது என்னை ஹீரோவாகவும் அவளை ஹீரோயினாகவும் கற்பனை பண்ணிப் பாப்பேன். அவ வெளிய வந்து நிக்கும்போது, என்ன கலர் டிரஸ் போட்டுருக்கானு ஒளிஞ்சிருந்து கவனிச்சி... குடுகுடுன்னு ஓடிப்போய் அதே கலர் டிரஸ் மாட்டிட்டு அவ முன்னாடி நிப்பேன். எதுக்கு??? "சேம் பிஞ்ச்"னு சொல்லி என் கையை கிள்ளுவா பாருங்க....அதுக்கு!இப்பிடியே போய்க்கிட்டிருந்தா என்ன அர்த்தம்னு ஒருநாள் என் காதலை(?) சொல்லத் துணிஞ்சிட்டேன். வீராவேசமா கிளம்புன என்னை, சுரேஷ் (பிரெண்டு) தடுத்து நிறுத்தினான். இப்பிடியெல்லாம் வெறுங்கைய வீசிகிட்டு போய் சொன்னா வேலைக்காவாதுண்ணு எனக்கு பயங்கர ஐடியா கொடுத்தான். கேட்டவுடனேயே கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டேன். ஆனா அவன் +2 படிக்கிறதாலும், பல பொண்ணுங்களுக்கு சைக்கிள் டிரைவர் வேலை பாக்குறதாலும் அவன் பேச்சை மதிச்சேன். அவன் சொன்ன ஐடியா 1. என் ரத்தத்தாலே லவ் லெட்டெர் எழுதிக்கிட்டு அவகிட்ட கொடுக்கணும். 2. லெட்டெர் கொடுக்கும்போது, சிவாஜி அளவுக்கு இல்லைண்ணாலும் சரத்பாபு அளவுக்காவது கண்ணீர் விடணும்.இந்த ஐடியாவை வேத வாக்காக நெனச்சிக்கிட்டு, வீட்டுக்கு போய் லெட்டெர் எழுதத் தயாரானேன். பிளேடை எடுத்து, கை மணிக்கட்டைக் கிழிச்சி......அய்யய்யோ, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுண்ணு முடிவு பண்ணினேன். காயமே இது பொய்யடாங்குற பழமொழி நினைவுக்கு வர, உடனே கையிலிருந்த விழுப்புண்ணைப் பார்த்தேன் (போன வாரம் ஓசியில டி.வி.எஸ் சாம்ப் வண்டி வாங்கி ரோட்டுல பிலிம் காட்டுனப்போ, பேலன்ஸ் மிஸ்ஸாகி லைட்டா குப்புற விழுந்ததுல பட்ட அடி). புண் கொஞ்சம் ஆறி, மேல கருப்பு கலர்ல மூடியிருந்தது. அத லைட்டா கீறி விட்டுட்டேன். கொஞ்சம் ரத்தம் வந்தது. சட்டுனு அத கையில ஒத்தி ஒரு பேப்பர்ல "I love you" அப்படீன்னு எழுதி முடிச்சாச்சு.. அடுத்து, கண்ணீர்.வீட்டுல அம்மா என்னை குனிய வச்சி குமுறும்போதும், பவானி டீச்சர் என் தலையில டிரம்ஸ் வாகிக்கும்போதும் கூட அழாம நெஞ்சுறுதியோட அப்பிடியே நிப்பான் இந்த அரவிந்த் சாமி. இப்படி எதையும் தாங்கும் இதயத்தோட திரிஞ்சிகிட்டு இருந்த நான்... எப்பிடி ஒரு பொண்ணு முன்னாடி அழுவறது? அப்போதான் எனக்குள்ள இருந்த ஐன்ஸ்டின் + பிரேமானந்தா ஒரு ஐடியா பண்ணாங்க. தைலத்தை கொஞ்சம் அதிகமா தலையில தடவுனாலோ, அத கண்ணுக்கு கிட்ட கொண்டு வந்தாலோ தன்னால கண்ணீர் பெருகும். இந்த ஐடியா சூப்பர்னு எனக்குள்ள சொல்லிக்கிட்டு, உடனே போருக்குத் தயாரானேன்.வீட்டுல இருந்து அமிர்தாஞ்சன் தைலம் & நம்ம லெட்டர் எடுத்துக்கிட்டேன். குஷ்பு பக்கத்து வீட்டுக்கு வந்துஎன்னை கூப்பிட்டா, கேரம் விளையாட.நான் மெதுவா அந்த காம்பவுண்ட் கதவ திறந்து உள்ள போனேன். அங்க, அந்த வீட்டு ஆன்ட்டி இருந்ததால, பேசாம உக்காந்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல குஷ்பு "நீ உம்மணாமூஞ்சி மாதிரி இருக்க... நான் வீட்டுக்கு போறேன் போடா" அப்படீன்னு சொல்லிட்டு கிளம்புனா.. எனக்கு மனசெல்லாம் படபடன்னு இருக்கு... என்ன பண்றதுண்ணு தெரியல.. அவ உண்மையிலேயே கிளம்புறா. உள்ளுக்குள்ள பதறுது.. இவ்ளோ நேரம் இருந்த தைரியம் இப்போ கால் வழியா நழுவி தரையில ஓடிடுச்சி.... அவ வீட்டு வாசலை நெருங்கியதும்.. இதுக்கு மேல தாமதிக்கக் கூடாதுண்ணு உடனே அவ பின்னாடி ஓடிப் போய் "குஷ்பு, ஒரு நிமிஷம் இங்கயே இரு. போய்டாத"னு சொல்லிடு, அவசர அவசரமா காம்பவுண்டு கேட் கிட்ட ஓடிப்போய் பரபரப்பா அமிர்தாஞ்சன் டப்பாவைத் திறந்தேன். அவ, "எங்கடா போய்ட்ட, போ... நான் போறேன்"னு சொல்லிட்டு அங்கிருந்து நகர.... நான் என்ன பண்றதுன்னு தெரியாம தைலத்தை எடுத்து ரெண்டு கண்ணுலயும் தடவிட்டேன். பாக்கெட்டுலருந்து லெட்டர எடுத்துக்கிட்டு நான் திரும்பவும்... அவ என் முன்னாடி வந்து நிக்கவும் சரியா இருந்தது... அவ கிட்ட பதட்டத்தோட "குஷ்பு, உன்ன....இந்த.. இத.. நீ.. நான்...ரத்தத்துல லெட்டர்... என் கண்ணீரைப் பார்...இதயம்...அய்யோ அம்ம்ம்ம்மா கண்ணு எரியுதே...ஆஆஆஆஆஆஆ...கண்ண்ண்ண்ண்ணூஊஊஊஊஊஊஊஉ குச்சிபூஊ.........""எரும மாடு, எனக்குன்னு வந்து பொறந்து தொலச்சிருக்கு....தல வலிச்சா தைலத்த கண்ணுலயா தேய்ப்பாங்க...? இந்த சனியனால 300 ரூபா கண் டாக்டருக்கு அழ வேண்டியதாப் போச்சி...பரீட்சை நேரத்துல கண்ணு வீங்கி எங்க உசிர எடுக்குறான்....இப்போ பப்ளிக் எக்ஸாம் எழுத முடியுமான்னு தெரியலயே..."
http://jolnapaiyan.mywebdunia.com- நன்றி

நீங்க சிரிக்க...

நீங்க சிரிக்க...
மனிதன்1: எனக்கு சர்க்கரை இல்லையாம்...மனிதன்2: டாக்டர் சொன்னாரா...?மனிதன்1: இல்ல, ரேஷன் கடை காரர் சொன்னார்.

மனிதன்1: என் மனைவி கோபத்துல செல்போன்னை தூக்கி என் மேல தூக்கி வீசிட மனிதன்2: அபரும் என ஆச்சு...?மனிதன்1: நான் நாட் ரேஅச்சப்லே ல இருந்ததால தப்பிசுடேன்.

மனிதன்1: சக்கரத்துக்கு வைக்க எலும்பிச்ச பழம் தான் வாங்குவாங்க, பலாப்பழம் எதுக்கு?

மனிதன்2: ரோடு ரோல்லேர் அடில வைக்க .

மனிதன்1: ???????

கவிதை...

கவிதை...


அழகான பெண்ணை அன்பாக பார்ப்பது காதல் இல்லை!அன்பான பெண்ணை அழகாக பார்ப்பது தான் காதல் !


அன்பே உன்னை கண்டதும் தேடுகிறேன் உன் அழகான சிரிப்பை....ஆனால் நியோ, என்னை கண்டதும் எடுகறாய் உன் பிஞ்ச செருப்பை...

அடி பெண்ணே... குப்பை தொட்டீஉம் என்னை காதலித்து இருக்கும்... நீ கிழித்து போட கவிதைகளை ஆடு படித்திருந்தால்...!

Tuesday, April 1, 2008